பசும்பொன் தேவர் கோவில் திருநீறு கூட ஸ்டாலினை தீண்டாது.! விபூதியை தட்டிவிட்ட ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த பேராசிரியர்..!

0
Follow on Google News

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது குரு பூஜை தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தேவர் சிலைக்கு மாலை மரியாதை செய்தும், ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திலும் மரியாதை செய்து வந்தனர், இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார், அங்கே அவருக்கு திருநீறு வழங்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட திருநீறை அவர் நெற்றியில் பூசாமல், கீலே தூசியை தட்டுவது போன்று தட்டி விட்டார், இந்த சம்பவ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தான் உயிருடன் இருக்கும் வரை திமுகவை தீண்டாதவர் ஐயா பசும்பொன் தேவர் அவர்கள். அவரது கோவில் திருநீறு கூட ஸ்டாலினை தீண்டாது என குறிப்பிட்ட பேராசிரியர்.

மேலும் 1962 சட்டமன்ற பொது தேர்தலின் போது பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக இருந்த பசும்பொன் தேவர் அவர்கள் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்தார், அப்போது திமுகவை கூட்டணியில் சேர்த்தால் வெற்றி பெற்று விடலாம் என பசும்பொன் தேவர் அவர்களிடம் ராஜாஜி கூற, அதற்கு தேவர் அவர்கள் திமுகவை கூட்டணியில் சேர்த்தால் நமக்கு நல்லது வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடலாம், ஆனால் அது நாட்டுக்கு நல்லது என கூறி திமுகவுடன் கூட்டணி அமைப்பதை திட்டவட்டமாக மறுத்தவர் பசும்பொன் தேவர் என தெரிவித்த பேராசிரியர்.

பசும்பொன் தேவர் அவர்கள் திக மற்றும் திமுக கட்சியை சேர்ந்த ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்ற எந்த தலைவர்களையும் நாகரிகம் கருதி கூட அவர்களை எந்த இடத்திலும் பாராட்டவில்லை, அவர்களுடன் நாகரீகம் கருதி இணைந்து புகைப்படம் எடுக்க கூட விரும்பாதவர் பசும்பொன் தேவர், திமுக இந்த தேசத்திற்கு நல்லது கிடையாது என தெளிவாக அரசியல் செய்தவர் பசும்பொன் தேவர் அவர்கள் என தெரிவித்த பேராசிரியர்.

மேலும் அவர் கூறுகையில், இறுதிவரை பசும்பொன் தேவர் அவர்களால் ஒதுக்கப்பட்ட திமுக பசும்பொன் தேவர் அவர்களின் நினைவிடம் வருவதே தவறு என சுட்டிக்காட்டிய பேராசிரியர், அதனால் தான் முக ஸ்டாலின் தேவர் நினைவிடம் வருவதை கண்டித்து நாம் அனைவரும் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்தோம், ஆனால் அதையும் மீறி பசும்பொன் வந்த ஸ்டாலினை தேவர் அவர்களின் ஆன்ம கூட மன்னிக்கவில்லை. தனது திருநீறு கூட ஸ்டாலினை தீண்டாமல் பார்த்துக்கொண்டார் பசும்பொன் தேவர் அவர்கள் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.