ஆன்லைன் வெப் சீரியஸில் எல்லை மீறும் ஆபாச காட்சிகள்..! பாலியல் தூண்டலை ஏற்படுத்தும் விதமான காட்சிகளால் அதிர்ச்சி…!

0
Follow on Google News

ஆன்லைன் வெப் சீரியஸ் ஆபாச காட்சிகள் மூலம் அனைவரையும் கவர்ந்தது வருகிறது. ஆரம்பத்தில் ஆன்லைன் காதல், நட்பு, கிரைம், திரில்லர் போன்ற கதைகளைக் கொண்டு வெப் சீரியஸ் வெளியாகி வந்தது. நாளாக நாளாக வெப் சீரியஸில் கலவி கொள்வது போன்ற சில ஆபாச காட்சிகள் இடம்பெறத் தொடங்கியது. நாளடைவில் எல்லை மீறி ஆபாச சீரியஸ் அதிகமாக வெளிவர தொடங்கியது.

கடந்த ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்ததால் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகம், திரையரங்குகள் அனைத்தும் முடங்கியது. நாடெங்கும் மக்கள் வீட்டில் முடங்கப்பட்டார்கள், அப்போது தான் வீட்டில் இருந்து பொழுதைக் கழிக்க முடியாமல் ஆன்லைன் பக்கம் சாய்ந்தனர். ஆன்லைனில் வலம்வரும் வெப் சீரியஸ் விளம்பரங்களால் அனைவரும் கவரப்பட்டு வெப் சீரியஸ் பக்கம் சாய்ந்தனர்.

அப்போது தான் தலைதூக்க ஆரம்பித்தது வெப் சீரியஸ். திரைப்படத்தில் கூட இது போன்ற ஆபாச காட்சிகள் இடம் பெறவில்லை அந்த அளவிற்கு வெப் சீரியஸில் நிரம்பி வழிந்தது ஆபாசம். திரைப்படத்தில் கூட முதலிரவுக்காட்சிகளில் கணவனும் மனைவியும் பேசிக்கொள்வார்கள் பிறகு விளக்கை அணைத்து விடுவார்கள், காலையில் எழுந்து பார்க்கும்போது மெத்தையில் பூக்களும் உடைந்த வளையல்களும் சிதறிக் கிடக்கும். இந்த காட்சிகளுக்கு கூட சில திரைப்படங்களில் கண்டனம் எழுந்துள்ளது. ஆனால் ஆன்லைனில் வெளியாகும் ஆபாச வெப் சீரியஸில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் முதலிரவு காட்சிகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள்.

ஓரினச்சேர்க்கை, கள்ளக்காதல், இன்னசன்ட் போன்ற விதவிதமான கதைகளுடன் வெப் சீரியஸ் வெளியிடப்படுகிறது. ஆன்லைனில் வெப் சீரியஸை காண கட்டணம் செலுத்த வேண்டும். தங்கள் வியாபாரத்திற்காக இதுபோன்ற வெப் சீரியஸை வெளியிடுகிறார்கள். தற்போது மாணவர்கள் ஆன்லைனில் தான் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஆபாச வெப் சீரியஸால் மாணவர்களின் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆன்லைனில் வெளியாகும் வெப் சீரியஸ்களுக்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்.