மனைவியுடன் மூன்று நாட்கள், காதல் மனைவியுடன் மூன்று நாட்கள், ஒரு நாள் விடுமுறை.! பிரச்சனை ஓவர்.!எங்கே தெரியுமா.?

0
Follow on Google News

மனைவிக்கு தெரியாமல் காதலித்த பெண்ணை திருமணம் செய்து குடும்ப நடத்தி வந்த தனது கணவனின் கள்ள காதல் திருமணம் விஷயம் மனைவிக்கு தெரிய வந்ததும், இரு தரப்பினரும் ஓன்று கூடி சமரசமான ஒரு முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் காதல் மனைவி பாலியல் பலாத்காரம் புகார் தெரிவித்துள்ளதால், மனைவி மற்றும் காதல் மனைவி இருவரையும் பரிதவிக்க விட்டு தலைமறைவாகி உள்ளார் அந்த கணவன்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷ் மஹதோ மனைவிக்கு தெரியாமல், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது கடும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தலைமறைவாக உள்ளார். ராஜேஷ் மஹதோ மீது அவருடைய காதல் மனைவி பாலியல் பலாத்கார புகார் கூறினார். இதனை தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே ராஜேஷ் திருமணம் செய்துள்ள நிலையில் இரண்டாவதாக புகார் கொடுத்துள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே திருமணமான ராஜேஷ், அதை மறைத்து, மற்றொரு பெண்ணை காதலித்து உள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு, வீட்டில் இருந்து வெளியேறி, தன் காதலியுடன் வெளியூருக்கு தப்பிச் சென்று அங்கே தனது காதலியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார், இதனை தொடர்ந்து கணவரை காணவில்லை என மனைவியும், தங்களுடைய மகளைக் காணவில்லை என்று அந்தக்காதலியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், ராஜேஷ் மற்றும் அவரது காதலியை, போலீசார் கண்டுபிடித்தனர். வெளியூரில் திருமணம் செய்து கொண்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்து பேசியதில், மனைவியுடன் மூன்று நாட்களும், காதல் மனைவியுடன் மூன்று நாட்களும் செலவிட வேண்டும். ஒருநாள் வார விடுமுறை என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதை இரு தரப்பினரும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் மனைவி மற்றும் காதல் மனைவி இருவருக்கும் ராஜேஷை முழுமையாக கைப்பற்றுவதில் கடும் போட்டி நடந்து வந்துள்ளது, இதில் முதல் மனைவியின் கடும் நெருக்கடியால் காதல் மனைவியுடன் ஒப்பந்தத்தின்படி தாங்காமல் இருந்துள்ளார், இதனை தொடர்ந்து, ஒப்பந்தக் தின்படி, கன்னுடன் தங்காததால், ராஜேஷ் மீது, பாலியல் பலாத்கார புகாரை, காதல் மனைவி கொடுத்துள்ளார். இந்த கடும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இருவரும் வேண்டாம் என தற்போது தலைமறைவாக உள்ள ராஜேஷை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.