தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல். அச்சத்தில் சிதறி ஓடிய சுற்றுலா பயணிகள் கூட்டம்…!

0
Follow on Google News

உலக அதிசயங்களில் இடம் பெற்று வந்த தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல். இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், ஆக்ராவில் அமைந்துள்ளது தாஜ்மஹால். உலக அளவில் பெயர் போன வரலாற்று காதல் சின்னம் தான் இந்த தாஜ்மஹால். இந்த வரலாற்று சின்னத்தை காண தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலாவிற்கு வெளிநாட்டவர்கள் தான் அதிகமாக தாஜ்மஹாலை காண வந்து செல்கிறார்கள்.

காதலர்களின் காதல் ஓவியம் தாஜ்மஹாலுக்கு மறைக்கப்பட்ட பல வரலாறுகள் உள்ளடக்கியது. நேற்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை உடனடியாக தாஜ்மஹாலில் பாதுகாப்பில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அடுத்த சில நொடிகளிலேயேஅங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, பிறகு “பாம் ஸ்குவாட்” வெடிகுண்டை தேடும் பணி தொடங்கியது. எவ்வளவு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை, என்ற பிறகு தான் தெரிந்தது இந்த தகவல் வெறும் வந்ததியே. காவல்துறைக்கு வந்த அழைப்பை செய்தது யார் என்ற தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வசமாக சிக்கிக் கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டார். கடினமான சூழ்நிலைகளில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டதை கண்டு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்