2013ல் மத்திய அமைச்சர் சொன்னது போல் வருமான வரி சோதனையா? டுவிட்டரில் மனம் திறக்கும் நடிகை டாப்ஸி…!

0
Follow on Google News

பிரபல முன்னணி நடிகையான டாப்ஸி ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர், போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். நெட்டை உயரத்தில் சுருட்டை முடியுடன் புன்னகை சிரிப்புடன் கவர்ச்சி அழகுடன் என்றுமே பரவசமாக இருப்பார் டாப்ஸி. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

பாண்டம் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு மூலம் அனுராக் காஷ்யப், விகாஸ் பால், டாப்ஸி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை மூன்று நாட்களாக சோதனை செய்தது. வருமான வரித்துறை டாப்ஸி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 5 கோடி ரூபாய்க்கான ரசீது ஒன்று கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில் நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் வருமான வரித்துறையினர் தன் வீட்டில் சோதனையை செய்ததை பற்றி டுவிட்டரில் மனம் திறந்த டாப்ஸி. தனது வீட்டில் மூன்று நாட்கள் மூன்று விஷயங்களை தேடி சோதனை நடைபெற்றது. அந்த மூன்று விஷயங்களைப் பற்றி டாப்ஸி தனது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்: 1.பாரிஸில் உள்ள தனக்கு சொந்தமாக வீட்டின் சாவி, 2.நான் வேண்டாம் என்ற 5 கோடி ரூபாய்க்கான ரசீது,

  1. 2013ம் ஆண்டு மத்திய அமைச்சர் சொன்னது போல வருமான வரித்துறை ரெய்டு. இந்த மூன்று விஷயங்களை தேடித்தான் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். அனுராக் காஷ்யப், விகாஸ் பால், டாப்ஸி இந்த மூன்று பேரும் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதால் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.