நள்ளிரவில் காதலியின் விபரீத ஆசை.! காதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன் சிசிடிவியில் சிக்கிய பரிதாபம்.!

0
Follow on Google News

ராஜஸ்தான், உதய்பூர் மாவட்டத்திலுள்ள சித்ர கூட் நகரை சேர்ந்த அவினாஷ் என்ற‌ வாலிபர் அதே ஏரியாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் நேரம் கிடைக்கும்போது சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இரவு நேரத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது காதலி காதலனிடம் எனக்கு சாக்லேட் வேண்டும் என்று ஆசையாக கேட்டுள்ளார்.

காதலியின் ஆசையை நிறைவேற்ற கிளம்பிய காதலன் கடைகளைத் தேடி இரவில் தெருத்தெருவாக அலைந்தான். இரவு நேரம் என்பதால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. வேறுவழியின்றி நண்பனிடம் ஐடியா கேட்க… அவனும் ஒரு ஐடியா கொடுக்க… பூட்டப்பட்டிருக்கும் ஒரு கடையை நோக்கி வேகமாகச் சென்றான்.

நண்பன் சொன்ன ஐடியாவை தன் காதலிக்காக செயல்படுத்த பூட்டப்பட்டிருந்த கடையை உடைத்து உள்ளே சென்றான். கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் சிறிய ரக சாக்லேட் முதல் காஸ்ட்லியான சாக்லேட் வரை அனைத்தையும் அள்ளிக் கொண்டுபோய் தன் காதலியின் ஆசையை நிறைவேற்றினான்.

காலையில் கடைகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் கடையின் உரிமையாளர் கேமராவை நோக்க, கேமராவோ சிதிலமடைந்து கிடந்தது. மேலும் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் நேராக காவல் நிலையம் சென்று புகார் செய்ய காவல்துறை களமிறங்கியது. கடையில் உள்ள சிசிடிவி உடைக்கப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள கடையில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்யும் போதுதான், அவினாஷ் என்ற வாலிபன் சிக்கினான். தற்போது காதலின் விபரீத ஆசைக்காக கடையின் பூட்டை உடைத்து தற்போது காவல்நிலையத்தில் பூட்டுக்குள் அகப்பட்டுக் கிடக்கிறான்…