ராகுல் காந்தி பாணியில் மக்கள் மனதில் இடம் பிடிக்க பிரியாணி கிண்டிய மநீம பெண் வேட்பாளர்…!

0
Follow on Google News

ராகுல் பாணியில் மக்களின் மனதில் இடம் பெற பிரியாணி கிட்டிய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியா தர்ஷினி. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் சென்னை எழும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுகிறது.

கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக எழும்பூர் தொகுதி பெண் வேட்பாளராக பிரியா தர்ஷினி போட்டி இடுகிறார். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் மக்களிடம் நேரடியாக சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் மற்றும் தொண்டர்களுடன் சென்று குடிசைமாற்று பகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பிரியதர்ஷினி. அப்போது அதே பகுதியில் பிரியாணி சமைத்து கொண்டு இருந்தவர்களிடம் சென்று பிரியாணி கரண்டி வாங்கி பிரியாணி கிண்டிய பிரியதர்ஷினி.

கடந்த மாதம் கரூர் பிரசாரத்திற்கு வந்த ராகுல் காந்தி சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமானார் அதே பாணியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார். சமையலை முடித்துவிட்டு தங்கள் கட்சி போட்டியிடும் டார்ச்லைட் சின்னத்திற்கு மீண்டும் வாக்கு சேகரிக்க கிளம்பிவிட்டார் பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி. மக்களிடம் வேட்பாளர் மற்றும் சின்னத்தை காட்ட போட்டிபோட்டு கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்பாடுத்தி வருகின்றனர்.