ரேணிகுண்டா திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் இறப்பு. நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி….

0
Follow on Google News

ரேணிகுண்டா திரைப்படத்தின் முக்கிய நடிகர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழில் வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் கார்த்திக். ஆனால் இவரை தீப்பெட்டி கணேசன் என்று தான் அழைப்பார்கள். இவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம். இவர் தே நடித்த ரேணிகுண்டா திரைப்படம் நல்ல வரவேற்பைப் கொடுத்தது.

இதான் நடிகர் அஜித் நடித்த பில்லா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். தென்மேற்கு பருவ காற்று, கோலமாவு கோகிலா பல திரைப்படங்கள் நடித்து நல்ல வளர்ச்சியைக் நோக்கி சென்று கொண்டு இருந்தார். இவரது நடிப்பில் காமெடி அனைவரை மகிழ வைத்தது.

இவர் தமிழை கடந்து தெலுங்கு திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். சமீபத்தில் இவருக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்.

இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு சமீபத்தில் தான் கால்கள் முழுவதும் செயலிழந்தன. இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உதயநிதி ஸ்டாலின் நடத்த “கண்ணே கலை மானே” திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளது.