பெற்றெடுத்த 6மாத பிஞ்சு நரபலி… தாய் செய்த கொடூர செயல்…

0
Follow on Google News

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திருமணம் ஆன கிருஷ்ணா என்பவர் புஜ்ஜி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து தற்போது 6 மாதங்கள் கடந்துவிட்டன. கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியான புஜ்ஜிக்கு நாக தோஷம் இருப்பதாக ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து புஜ்ஜி கணவனை, குழந்தையும் பிரிந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனால் மிக பெரிய மன அழுத்தத்தை புஜ்ஜி சந்திக்க தொடங்கினார். சமீபத்தில் ஜோசியர் ஒருவர் புஜ்ஜியின் நாக தோஷத்தை போக்கி தருவதாக கூறி, அதற்கு ஒரு பரிகாரம் ஒன்றை கூறியுள்ளார். அந்த பரிகாரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த புஜ்ஜி ஒருவழியாக செய்ய ஒப்புக்கொண்டார். புஜ்ஜியும் 6மாத குழந்தையை நரபலி கொடுப்பது தான் ஜோசியர் சொன்ன அந்த பரிகாரம். புஜ்ஜி பரிகாரத்தை நிறைவேற்ற அவரது வீட்டுக்குள் பூட்டிய அறையில் குழந்தையுடன் நரபலிக்கு தயாரானார்.

பூட்டிய அறையில் ஒரு சிவன் படமும் அதற்கு முன்பு தனது 6 மாத குழந்தையும், கையில் ஒரு கத்தியுடன் நரபலி தயாராக, சற்று இமைக்கும் நொட்டிக்குள் பிஞ்சுக் குழந்தையின் கழுத்தை அறுத்து சிவன் படத்திற்கு ரத்த அபிஷேகம் செய்தார். பிஞ்சுக் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அருகிலிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றவுடன் பார்த்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சடலமாக ஆறுமாத பிஞ்சு குழந்தையை கொன்று கத்தியுடன் அமர்ந்திருந்தது தாய் கண்டு அனைவரும் திரித்து போய்விட்டனர். தற்போது செய்த தவறுக்கு சிறையில் இருக்கிறார், இதற்கு என்ன பரிகாரமோ.! யாரோ ஒரு ஜோசியர் சொன்னதைக் நம்பிக்கொண்டு பெற்ற 6மாத பிஞ்சு குழந்தையை கொள்ள ஒரு தாய்க்கு எப்படித்தான் மனம் வந்ததோ..