விஜயகாந்தை ஆபாசமாக பேசி தர்ம அடி வாங்கிய வடிவேலு.! அடி தாங்க முடியாமல் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல நடிகர் தியாகு சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு பற்றி இதுவரை வெளிவராத சம்பவம் குறித்து பேசினார். அதில் சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு குடை பிடித்து கொண்டு செல்வர் நடிகர் வடிவேலு, அப்போது அவருக்கு சம்பளம் ரூபாய் 250, சின்ன கவுண்டர் படப்பிடிப்பின் போது தினமும் மாலை நேரத்தில் விஜயகாந்துக்கு கால் அமுக்கி விடுவார் நடிகர் வடிவேலு, ஆனால் பணம் வந்ததும் வடிவேலுக்கு கண்ணை மறைத்து விட்டது, நிறை குடம் தழும்பாது என்பதற்கு உதாரணம் நடிகர் வடிவேலு.

நடிகர் விஜயகாந்த் வீட்டின் அருகில் ஒரே தெருவில் வீடு வாங்கினார் வடிவேலு, பணம் வடிவேலுக்கு அதிகமானதும், விஜயகாந்த் வீட்டின் அருகில் வீடு வாங்க வேண்டும் என்பதற்காகவே வடிவேலு வீடு வாங்கினார், வக்கீல் பாபா என்பவர் வடிவேலு வீட்டின் எதிர்புறம் இருந்தார், அவர் நடிகர் விஜயகாந்த் உறவினர், வக்கீல் பாபா இறந்ததும் தூக்கம் விசாரிக்க உறவினர்கள் அனைவரும் வடிவேலு வீட்டின் எதிரில் உள்ள வக்கீல் பாபா வீட்டின் முன் குவிந்தனர்.

தேமுதிக தொண்டர்களும் அங்கே குவிந்து இருந்தனர், இந்நிலையில் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் வடிவேலு வீட்டின் அருகில் அவர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் துக்க வீட்டுக்கு வந்தவர்களிடம் இங்கே வாகனம் நிறுத்த கூடாது உடனே வாகனத்தை எடுக்க வேண்டும் என வடிவேலு சத்தமிட்டுள்ளார், அதற்கு துக்கம் வீடு பிணத்தை எடுத்ததும் வாகனத்தை எடுத்துவிடுவார்கள் என அங்கே இருந்தவர்கள் கூறியுள்ளார்கள், ஆனால் வடிவேலு பிடிவாதமாக துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அங்கே இருந்தவர்கள் மறைந்தது விஜயகாந்த் உறவினர் தான், கொஞ்சம் பொறுமையாக பேசுங்க என எடுத்து கூற, அதற்கு விஜயகாந்த் என்ன பெரிய இவனா.? என்று ஆபாசமாகவும் விஜயகாந்தை திட்டியுள்ளார், அதற்கு அங்கே இருந்த விஜயகாந்த ஆட்கள் வடிவேலுவை அடி வெளுத்துள்ளார்கள், உடனே வடிவேலு தஞ்சாவூரில் இருந்த நடிகர் தியாகுவை தொடர்பு கொண்டு தன்னை விஜயகாந்த் ஆட்கள் அடிப்பதாக கூறியுள்ளார்.

உடனே அதிகாலை 4 மணிக்கு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியை தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆட்கள் வடிவேலுவை அடித்த சம்பவத்தை தெரிவித்து நீங்க தான் அவரை காப்பாற்ற வேண்டும் என தியாகு கூறியுள்ளார், பின்பு நாஞ்சில் குமரன் என்கிற காவல் துறை ஆணையரை தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆட்களிடம் இருந்து வடிவேலுவை கைப்பற்றியதாக வடிவேலு அடிவாங்கிய சம்பவத்தை நடிகர் தியாகு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.