ஸ்டாலின் முதல்வரானால் மூன்றே மாதத்தில் ஆட்சி கவிழும்..! ஜோசியர் சொன்ன அறிவுரை.. அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பத்தினர்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், தேர்தல் முடிந்த இரு தினங்களில் அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அடுத்தது உங்கள் ஆட்சி தான் என நம்பிக்கை கொடுத்துள்ளனர், இதே போன்று திமுக தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் நீங்க தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் நம்பிக்கையுடன் இருங்க என ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு மேற்கு வங்கம் புறப்பட்டு விட்டார்.

இதனை தொடர்ந்து அடுத்தது திமுக ஆட்சி தான் என நம்பிக்கையில் இருக்கும் முக ஸ்டாலின் மந்திரிசபை அமைக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் பல வருடங்களாக முக ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் அவருடைய ஜாதகத்தில் இல்லை என தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கையில், அதனால் தான் இதுவரை ஸ்டாலின் முதல்வர் நாற்காலியின் அமரும் வாய்ப்பு அமையவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல மேடைகளில் பேசி வந்தனர்.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பு மன்னார்குடியில் இருந்த பிரபல மூக்கு பொடி சாமியாரை முக ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாகவும், அப்போது அந்த பிரபல மூக்கு பொடி சாமியார் உனக்கு முதல்வராகும் யோகம் கிடையாது என ஸ்டாலினை பார்த்து கூறியதாக அந்த கால கட்டத்தில் தகவல் வெளியானது, இதே போன்று சில முக்கிய ஜோதிடர்களும் ஸ்டாலின் குடுத்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர், ஆனால் இதற்கு பரிகாரம் செய்தால் சரியாகும் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் பகுத்தறிவு நாத்திகம் பேசி வந்தாலும் அவருடை குடும்ப பெண்கள் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்கள், அதில் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மிக தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர், மேலும் தொடர்ந்து பிரபல ஜோதிடர்கள் கூறும் ஆலோசனை படி பிரசித்திபெற்ற கோவிகளுக்கு சென்று அவர் பரிகாரம் செய்து வழிபடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும்.

இதனை தொடர்ந்து தேர்தல் முடிந்து சமீபத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் ஸ்டாலின் முதல்வர் யோகம் குறித்து கேட்டுள்ளனர், அதற்கு முக ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்புகள் அமைந்தால் கூட மூன்று மாதங்கள் இவர் தாக்கு பிடிப்பது கடினம் என்றும், மூன்று அல்லது ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும் வாய்ப்புகள் இருக்கும் என எச்சரித்துள்ளார், மேலும் இவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அடுத்த நிமிடத்தில் இருந்து இதற்க்கு முன் இவர் சந்திக்காத பல இடையூறுகளை சந்திக்க வேண்டும்.

இவருக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்கள் இவரை ஆட்டி படைப்பார்கள், இவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டியவர்களின் சிலர், அதிகாரம் படைத்தவர்களிடம் தஞ்சம் அடைவார்கள், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஸ்டாலின் ஆளாவர் என பிரபல ஜோசியர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட ஸ்டாலின் குடும்பத்தினர் குழப்பத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதை சரி செய்யும் விதத்தில் சில பரிகாரங்களை ஜோதிடர் தெரிவித்து, இதை முறையாக செய்யுங்கள் மற்றது அனைத்தும் இறைவன் செயல் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.