அடங்க மறு, அத்து மீறு என்றால் உங்களை அடக்கி வைக்க பாஜக தயார்.! பேராசிரியர் எச்சரிக்கை.!

0
Follow on Google News

கடந்த 14ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினத்தில் மதுரை தல்லாகுளம் பகுதியில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சென்ற பாஜகவினரை அங்கே இருந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அங்கிருந்து விடுதலை சிறுத்தை கட்சியியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆபாசமாக பேசியும் பாஜகவினரை அம்பேத்கார் சிலை இருக்கும் பகுதிக்கு வர கூடாது என அத்துமீறி நடந்து கொண்டனர்.

விசிக தொண்டர்கள் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது, இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் அத்துமீறி நடந்து கொண்ட அதே தல்லாகுளம் அம்பேத்கார் சிலைக்கு நேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார், இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு பேசுகையில்.

மதுரையில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் குண்டர்கள் ரவுடி தனம் செய்து வருகின்றனர், பாஜகவினரை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றவர்கள் மீது மதுரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, பயங்கரவாதிகளுக்கு பெயில் கொடுக்கும் ஒரே காவல் துறை மதுரை காவல் துறை தான், ஆனால் பாஜகவினர் தும்மினால் வழக்கு பதிவு, மேலும் தொடர்ந்து பாஜகவினர் மீது மதுரையில் நடந்த தாக்குதலை பட்டியலிட்ட பேராசிரியர்.

மதுரையில், விடுதலை சிறுத்தை கட்சிகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பெண்களை முன்னிறுத்தி பாஜகவினர் மீது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர், நீ ஆண்களை முன்னிறுத்தி சண்டையிட்டால், பாஜகவிலும் ஆண்கள் உள்ளனர் அவர்களும் சண்டையிட தயார், தீவிரவாதியாக இருந்தால் கூட பெண்களை மதித்து பழகியவர்கள் பாஜக தொண்டர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட விடுதலை சிறுத்தை கட்சியினர் பெண்களை முன்னிறுத்தி தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை காவல் துறைக்கு தெரிய வேண்டாமா.? மதுரை காவல் துறைக்கு நல்ல புத்தி வரவேண்டும் என மதுரை மீனாட்சி அமமன் கோவிலில் பிராத்தனை செய்ய வேண்டிய கட்டாயம் வரும் என்றும், மேலும் தொடர்ந்து அடங்க மறு, அத்து மீறு என விடுதலை சிறுத்தை கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வந்தால் அதை அடக்கி வைக்க பாஜக தயார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.