தொழில் அதிபரை திருமணம் செய்த சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி…

0
Follow on Google News

சின்னத்திரையில் பிரபலமான கன்னட நடிகையான சைத்ரா தற்கொலை முயற்சி செய்துள்ளார். சைத்ராவின் இந்த செய்கையால் சின்னத்திரையை அதிர்ச்சியில் உள்ளக்கியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தான் சைதரா. இவரது முழுப்பெயர் சைத்ரா கொட்டுரு. சைத்ரா சமீபத்தில் தான் மட்டியாவை சேர்ந்த மிக பெரிய தொழில் அதிபரான நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார்.

நாகார்ஜுனாவின் குடும்பத்தினரால் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்தது. அதையும் மீறி நாகார்ஜூனாவும், சைத்ராவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். குடும்ப பிரச்சினை காவல் நிலையம் சென்றது. நாகார்ஜூனாவையும், சைத்ராவையும் காவல் துறை காவல் நிலையம் வரவைத்து விசாரித்தனர். பிறகு இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்து காவல் துறை வீட்டிற்கு அனுப்பினர்.

ஆனால் வீட்டில் சென்ற பிறகு தான் பிரச்சினை காத்து கிடந்தது. நாகார்ஜூனா, மனைவி சைத்ராவையும் உள்ள நுழைய விடாமல் தகராறு செய்தனர் நாகார்ஜூனா குடும்பத்தினர். நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் நாகார்ஜூனா மனதை மாற்றியது. நாகார்ஜூனா தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி தான் இந்த திருமணம் நடந்ததாக கூறினார். இதை கேட்ட மனைவி சைத்ரா வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனதில் தைரியத்தை உருவாக்க வேண்டும் ஆனால் தற்போது சைதராவின் இந்த நடவடிக்கை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது